25 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு: கே.சிவாஜிலிங்கம்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை காலை 11மணிக்கு அலரி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்திக்கவிருப்பதாக த.தே.வி.கூட்டணியின் செயலாளர் நாயகம் கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் அவசரப் பிரச்சினைகளான, மீள்குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் படைமுகாம்களை அண்டிய பிரதேசங்களில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக