25 நவம்பர், 2010

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற விவகாரம்:



ஜனாதிபதியுடனும் எஸ். எம். கிருஷ்ணாவுடனும்
பேச தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்மானம்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீள்குடியேறி வரும் மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடனும் இலங்கை வரும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடனும் சந்தித்து பேச்சு நடத்த தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முடிவு செய்துள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இல்லத்தில் இடம்பெற்ற தமிழ்க்கட்சிகளின் அரங்க சந்திப்பிலேயே மேற்கண்ட முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது மீள்குடியேறி வரும் மக்கள் எதிர்நோக்கி வரும் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதிகளில் நிலவும் நெருக்கடி நிலைகள் ஆகியன தொடர்பில் இருவருக்கும் எடுத்து விளக்குவது எனவும் அது தொடர்பிலான இறுதி வரைவு கொழும்பிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியின் இல்லத்தில் புதன்கிழமை தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட உபகுழு உறுப்பினர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் காத்திரமான பங்களிப் பினைக் கருத்திற்கொண்டும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலை யிலும் மீள்குடியேற்ற நடவடிக் கைகளில் இந்திய அரசாங்கம் தற்சமயம் வழங்கி வரும் பங்களிப் பினை கருத்திற்கொண்டும் மேற்படி சந்திப்பானது அவசியமானது என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே இம்மாத இறுதிக் குள்ளாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் மக்களது மீள் குடியேற்றம் தொடர்பிலும் தற்சம யம் மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய மற்றும் அன்றாட பிரச்சினைகள் தொடர் பிலும் கலந்துரையாடுவதற்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இச் சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி மற்றும் ஆர்.

சங்கையா தமிழ் தேசிய விடுதலை முன்னணி சார்பில் எம். கே. சிவாஜிலிங்கம், என். சிறி காந்தா மற்றும் எஸ். விமல்ராஜ், புளொட் அமைப்பின் சார்பில் த. சித்தார்த்தன் மற்றும் ஆர். ராகவன், நாபா ஈ. பி. ஆர். எல். எவ். சார்பில் த. சிறிதரன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் ந. குமரகுருபரன், சிறி ரெலோ சார்பில் பி. தஉயராசா மற்றும் ஜீ. சுரேந்திரன், ஈரோஸ் முக்கியஸ்தர் அங்கயற்கன்னி இலங்கை எதிலியர் அமைப்பின் சார்பில் எஸ். சி. சந்திரஹாசன், பீ. மாணிக்கவாசகர் மற்றும் றெமி பெரேரா தமிழர் மகா சங்கத்தின் சார்பில் த. கோபால கிருஷ்ணன், மனித உரிமைகள் இல்ல பிரதிநிதிகள், ஈ.பி.டி. பியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அ. இராசமாணிக்கம், மு. சந்திரகுமார் ஆகியோர் தமிழ் அரங்கத்தின் சந்திப்பில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக