25 நவம்பர், 2010

இலங்கையில் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா, சீனா அதிகாரப் போட்டி



இந்தியாவும் சீனாவும் இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான அதிகாரப் போட்டியில் இறங்கியுள்ளன. இது எமது நாட்டில் சர்வதேச பயங்கரவாதம் தோன்றுவதற்கு வழிவகுக்கும் என ஐ.தே.கவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது நாள் விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'யுத்தம் முடிவடைந்த நிலையில் மீண்டுமொரு யுத்தத்திற்கு எண்ணெய் ஊற்றுகின்றீர்கள். உலக வரைபடத்தில் இலங்கை முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. எனவே இந்தியாவும், சீனாவும் இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் அதிகாரப் போட்டியில் இறங்கியுள்ளன.

இந்நிலமையானது ஆப்கானிஸ்தான், சூடான் போன்ற நாடுகளின் நிலமையை எமது நாட்டில் ஏற்படுத்துவதோடு சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் தோன்றும் அபாயம் உருவாகும்" எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக