25 நவம்பர், 2010

இரட்டைப்பாதையில் மண்சரிவு; போ.வ. பாதிப்பு


கம்பளை – நுவரெலிய பிரதான வீதியில் புசல்லாவை இரட்டைப் பாதை நகருக்கருகா மையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு கம்பளை பகுதிக்கான குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

நேற்று புதன்கிழமை பெய்த கடும் மழையினால் இரட்டைப்பாதை பகுதிக்கரு கிலுள்ள வீதியின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் ஒரு வழிப் போக்குவரத்து மாத்தி ரமே இவ்வீதியில் இடம்பெறு கிறது. மண் சரிவின் காரணமாக கம்பளை பகுதிக் குச் செல்லும் நீர் குழாயும் உடைப்பெடுத்துள்ளது.

மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் தொடர்ச்சியாக வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப் பிடத்தக்கது. தொடர்ந்தும் இவ்வீதி யில் வெடிப்புகள் ஏற்பட்டு வருவ தோடு தொடர்ந்தும் இவ்வீதியில் மண் சரிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக