25 நவம்பர், 2010

புலிகளுக்கு ஆதரவு வழங்கிய அதிகளவானோர் வாபஸ் பெற்றுக் கொண்டனர் : சிவபாலன்

பெருமளவான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாக கருதி அவர்களுக்கு வழங்கி வந்த ஆதரவினை வாபஸ் பெற்று கொண்டதாக வைத்திய கலாநிதி சிவபாலன் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையிலேயே கலாநிதி சிவபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர், கடந்த காலங்களில் யுத்தம் நடைபெற்ற போது நான் அங்கு கடமையாற்றி வந்தேன். இக் காலப் பகுதியில் தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாகவே கருதினர். ஆனால் தற்போது அந்த ஆதரவினை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதேவேளை 2006ஆம் ஆண்டின் பின்னர் அதிகளவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கி வந்த ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொண்டனர். என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக