7 நவம்பர், 2010

'ஹார்ட் டு ஹார்ட்' இறுதி நிகழ்வில் பங்கு கொள்ள பிரி. தமிழருக்கு அழைப்பு

142 கிலோ மீற்றரைக் கடந்து இன்றைய இறுதி நாளில் எழுச்சி கொண்ட பிரித்தானிய தமிழர்களின் 'ஹார்ட் டு ஹார்ட் வோக்' - நிறைவு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக பிரித்தானியாவில் தமிழர்களால் தொடரப்பட்டுவரும் போர்வீரர்களை நினைவுகூரும் 'ஹார்ட் டு ஹார்ட் வோக்' நடைபயணத்தில் ஐந்தாவது நாளான நேற்று பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுடன் பலர் இணைந்து, தொடர்ந்தும் நடந்து வருகின்றனர்.

ஐந்தாவது நாளில் எழுச்சி கொண்டுள்ள இந்த நடைபயணத்தை இன்று காலை 9:00 மணியளவில் லூட்டனில், அப்பகுதி மேஜர் கிஸ் வோர்ஸிப் (ஏஐந ரஞதநஏஐட) என்பவரும், கவுன்ஸிலர் ரொம் ஸோ (பஞங நஏஅர) என்பவரும் மெழுகுவர்த்தி ஏற்றி அகவணக்கம் செலுத்தி அனைவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

ஆரம்ப நிகழ்வில் றோயல் அங்கிலிக்கன் றெஜினெண்ட் ஐ சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி பேர்ட்டன் ( ஆமதபஞச - ல தச்ஞிஹங் அடூகிடுஹடூ தடீகிடுஙிடீடூசி) உட்பட அப்பகுதி வாழ் பல்லின மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் சிறப்பு விடயமாக நடைபயணத்தை மேற்கொள்ளும் நபர்களை வாழ்த்திய லூட்டன் மேயர் கிஸ் வோர்ஸிப் தனது ஆடையில் அணிந்திருந்த கமபஞச ஐச ஏஅதஙஞசவ எனும் பதக்கத்தைக் கழற்றி 'ஹார்ட் டு ஹார்ட் வோக்' இன் ஏற்பாட்டாளரான ஜோகணேஸுக்கு அணிவித்தார். அத்தோடு நடைபயணத்தில் பங்குகொள்ளும் ஏனையோருக்கும் அதேபோன்ற பதக்கங்களை வழங்கிக் கெளரவித்தார்.

லூட்டனில் இருந்து காலை புறப்பட்ட இவர்கள் நேற்று சென். ஹோல்பன்ஸ் எனும் இடத்தில் நடைபயணத்தை நிறைவுசெய்து மீண்டும் அங்கிருந்து இறுதி நாளான இன்று ஞாயிறு காலை 9:00 மணிக்கு புறப்பட்டனர். லண்டன் வெஸ்மினிஸ்டர் பகுதியை மாலை 6:00 மணியளவில் இவர்கள் சென்றடையவுள்ளனர்.

இன்று லண்டன் வெஸ்ட்மினிஸ்ரர் பகுதியில் நிறைவடையவுள்ள இந்த நடைபயணத்தை வரவேற்கவும், அங்கு இடம்பெறவுள்ள இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவும் பிரித்தானிய பிரதமரின் காரியாலயமான இலக்கம் 10 டவுனிங்க் ஸ்ட்ரீட்டில் மாலை 6:00 மணிக்குப் பிரித்தானியத் தமிழர்களை ஒன்றுகூடுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக