7 நவம்பர், 2010

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு லண்டனிலிருந்து காண்டாமணி

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்குச் சுமார் இருபத்தெட்டாயிரம் பவுண்கள் பெறுமதியில் காண்டாமணி ஒன்று இங்கிலாந்தில் உள்ள லண்டன் மாநகரிலுள்ள துர்க்கையம்மன் ஆலய அடியவர்களினால் செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கான காண்டாமணி செய்யப்பட்டு தற்போது குறிப்பிட்ட தொழிற்சாலையில் வைத்து பூசை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த மணி இந்தவாரம் லண்டனில் இருந்து கப்பலில் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது.

தற்போது துர்க்கையம்மன் ஆலயத்தில் சுமார் 924 கிலோ நிறையுடைய இந்த காண்டாமணியைப் பொறுத்துவதற்கு வசதியாக மணிக்கூண்டுக் கொபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மணியின் ஓசை சுமார் நான்கு கிலோ மீற்றர் துராத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரம் வரை கேட்கக் கூடியதாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தவாரம் கப்பலில் ஏற்றப்படும் மணியானது அடுத்த மாத முற்பகுதியில் கொழும்பை வந்தடையும் எனவும் அங்கிருந்து இந்த காண்டாமணி தரைவழிப்பாதையூடாக ஆலயத்திற்கு எடுத்து வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக