7 நவம்பர், 2010

ஜனாதிபதி பதவியேற்பின் போது கிழக்கில் ஒரு இலட்சம் மரக் கன்றுகள் நடப்படும்: சந்திரகாந்தன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பு வைபத்தையொட்டியும், ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டும் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் மரக் கன்றுகள் நடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முதலைமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இம்மரக் கன்றுகள் நடப்படவுள்ளன. மாகாண ஆளுனர், முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இம்மர நடுகை வைபவங்கள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக எதிர்வரும் 15ம்திகதி இம்மரம் நடுகை கிழக்குமாகாணம் பூராக இடம்பெறவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக