8 நவம்பர், 2010

கொழும்பு நகரத்தை சூதாட்ட நகரமாக மாற்ற அரசாங்கம் முயற்சி: ஜே.வி.பி

கொழும்பு நகரத்தை சூதாட்ட நகரமாக மாற்ற அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பு நகரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் சூதாட்ட நகரத்தைப் போன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள சூதாட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு நகரம் சூதாட்ட புரியாக மாற்றமடைந்து விடும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மாநகரசபையை அதிகாரசபையாக உருவாக்கி அதன் மூலம் அரசாங்கம் தமது இலக்குகளை எட்டுவதற்கு முயற்சிப்பதாக கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராக கட்சி பேதம் பாராட்டாது வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக