8 நவம்பர், 2010

வடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை


ஜல் சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு வடமேற்கு கடற் பரப்பு இரண் டொரு தினங்களுக்குக் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்று தெரிவித்தார்.

வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலில் மீனவர்கள் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜல் சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்று விட்டது. என்றாலும் இச்சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் கொந்தளிப்பாக உள்ளது. இக் கடற் பரப்பில் தொடராக இடிமின்ன லுடன் மழை பெய்யும் அதேநேரம் இக் கடற் பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.

காற்று வட மேற்காக வீசும். இப்பிரதேசங்களில் மணித்தியால த்திற்கு 30 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் காற்று 60 - 70 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்க முடியும். இதன் காரணத்தினால் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக