14 அக்டோபர், 2010

நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வாழ முடியாது: சிவாஜிலிங்கம்

நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வாழ முடியாத நிலை காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்ம் தெரிவித்தார்.

இன்று நிவித்திகல குக்குலகல பிரதேசத்துக்கு விஜயம் செய்த சிவாஜிலிங்கம் அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்துள்ளார்.

இது குறித்து எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த எம்.கே சிவாஜிலிங்கம்,

"நான் இன்று நிவித்திகல குக்குலகல பிரதேச மக்களை நேரில் சென்று சந்திதேன். இவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இம் மக்கள் இங்கு தொடர்ந்து தங்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதுவரை 10 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேறியுள்ளதாகவும் தற்போதும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தமிழ் குடும்பங்களின் 25 வீடுகள் பெருபான்மை இனத்தவரால் தாக்கப்பட்டுள்ளதோடு உடைமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே வந்து தம்மை பார்வையிட்டதாகவும், எந்த ஒரு தமிழ் அமைச்சரும் வரவில்லை என மக்கள் கவலை தெரிவித்தனர்" என மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக