14 அக்டோபர், 2010

திருகோணமலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் மேல் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்த கைதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். திக்வல்ல சியம்பலாப்பே பகுதியைச் சேர்ந்த 62 வயதான கருணாரட்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக