14 அக்டோபர், 2010

மீள்குடியேற்றம் என்ற போர்வையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் : ததேகூ குற்றச்சாட்டு

இடம் பெயர்ந்த சிங்கள மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவித ஆட்சேபனைகளும் கிடையாது.

ஆனால் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த வடகிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த 1 லட்சதத்து 65 ஆயிரம் சிங்கள மக்களையும் மீளக் குடியேற்ற வேண்டும் என்ற கூற்றுக்குப் பதிலளித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"கடந்த 30 வருடகால யுத்தத்தின்போது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அன்று சகலருமே இடம்பெயர்ந்தனர். ஆனால் மிக அதிகமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழர்கள்தான்.

வடக்கு, கிழக்கிலிருந்து 12 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அதற்கும் காரணம் யுத்தம்தான்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக