14 அக்டோபர், 2010

சவூதி அரேபியாவுக்கு இலங்கையரை அனுப்புவதில் எவ்விதத் தடையுமில்லை


சவூதி அரேபியாவுக்கு இலங்கையர்களை வேலைவாய்ப்புக்காக அனுப்புவதில் எவ்வித தடையுமில்லை. இரு அரசாங்கங்களுக்குமிடையில் அவ்வாறு எத்தகைய உத்தியோகபூர்வ முடிவு களுமில்லையென வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக முகாமையாளர் டி. பி. வீரசேகர தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சிலர்

மேற்கொண்டுவரும் பிரசாரங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்ட அவர் சவூதிக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

வருடாந்தம் இலங்கையிலிருந்து 60,000ற்கு மேற்பட்டவர்கள் வேலைவாய்ப் பிற்காக சவூதி அரேபியாவுக்கு பணியகத்தால் அனுப்பப்பட்டு வருகின்றனர். அத்துடன் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பல்வேறு தொழில் துறைகளில் பணிபுரிகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கும் சவூதி அரேபிய ஆட்திரட்டல் குழுவுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்று தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதாக அறிய முடிகின்றது. அது குறிப்பிடத்தக்க பிரச்சினையொன்றல்ல. இலங்கையர்களை வேலைவாய்ப்புக்கு அனுப்புவதற்கு இது எவ்விதத்திலும் எமக்கு தடையாக அமையாது.

இரு அரசாங்கங்களுக்கிடையில் அத்தகைய எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானங்களும் இல்லாத நிலையில் நாம் அதனைக் கவனத்திற்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக