8 அக்டோபர், 2010

பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி புத்தளத்தில் மகஜரில் கையெழுத்து இடும் நிகழ்வு

இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரும் மகஜரில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று காலை புத்தளம் பஸ் நிலையம் அருகில் இடம்பெற்றது.

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், புத்தளம் மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளருமான சமன் புஷ்பகுமார தலைமையிலான குழு இந்த ஏற்பாட்டை மேற்கொண்டது.

இந்நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு இம் மகஜரில் கையெழுத்திட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக