8 அக்டோபர், 2010

கியூப பிரஜைகளை விடுவிக்கக் கோரி அமெ.தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

கியூப பிரஜைகள் ஐவரை சிறை வைத்திருக்கும் அமெரிக்கா அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக தேசிய சுதந்திர முன்னணி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

அமைச்சர் விமல் வீரவன்சவுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பான மனுவொன்றை அமெரிக்கத் தூதருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளிக்க முயற்சி செய்தபோதும் அது வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக