5 அக்டோபர், 2010

வெளிநாட்டு இராணுவத்தினருக்கு நான்கு பயிற்சி நெறிகளை வழங்க இலங்கை இராணுவம் தீர்மானம்

வெளிநாட்டு இராணுவத்தினருக்கு இலங்கையில் நான்கு பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்தினர் தீர்;மானித்துள்ளனர். பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்தவருடம் ஜனவரி மாதம்முதல் இந்தப் பயிற்சிநெறிகள் வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். கொமாண்டோ பாடநெறி, விசேட பாதுகாப்பு அரண் பாடநெறி, குறிபார்த்து சுடுதல் பாடநெறி மற்றும் மாதுறுஓய பயிற்சி நிலையத்தின் பாடநெறிகள் என்பன இதன்கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக