5 அக்டோபர், 2010

கைதடி முதியோர் இல்லம் புனரமைப்புக்கு ரூபா 15 மில்லியன் ஒதுக்கீடு



யாழ்ப்பாணம், கைதடி பிரதேசத்திலுள்ள (சாந்தி நிலையம்) முதியோர் இல்லத்தை புனர்நிர்மாணம் செய்ய 15 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

வடமாகாண சபையின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புனர்நிர்மாண பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் மேற்பார்வையில் இயங்கிவரும் இந்த முதியோர் இல்லத்தில் சுமார் 140 பேர் தங்கியுள்ளதாக தெரிவித்த அவர், இதற்குத் தேவையான சகல வசதிகளையும் உரிய முறையில் செய்து கொடுக்க திட்டமிட்டுள் ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த முதியோர் இல்லத்தின் கட்டடங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக