7 அக்டோபர், 2010

சிசுவை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தாய் கைது



பிறந்து சில மணிநேரத்துக்குள் சிசுவொன்றை குத்திக்கொலை செய்து சடலத்தை வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த சம்பவம் ஒன்று இன்று காலை சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி தெரிய வருவதாவது, வயிற்றுவலியென கூறி குறித்த பெண் (37 வயது) கழிவரைக்குச் சென்று குழந்தையை பெற்றெடுத்து குத்தி கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்ததாகவும் அங்கு படிந்திருந்த இரத்தக் கறையைக் கண்ட கணவர் சந்தேகம் கொண்டு இது தொடர்பாக பொலிஸில் முறையிட்டுள்ளார்.

உடன் செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதோடு மேலதிக சிகிச்சைக்காக பெண்ணை ராகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக