7 அக்டோபர், 2010

உலக சந்தை விலைகளைவிட குறைந்த விலைக்கு எரிபொருள் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை






உலக சந்தை விலைகளை விட குறைந்த விலைக்கு எரிபொருள் பெறுவது தொடர்பாக பல நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். இந்த முயற்சி பலனளித்தால் பாவனையாளர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுமென பெட்ரோலிய தொழில்துறை அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார்.

வாய்மூல விடைக்காக ஐ. தே. க. எம். பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு, கிழக்கில் உள்ள எரிபொருள் நிலையங்கள் குறித்து ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 156 பெற்றோல் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்கள் 147ம் இந்திய எண்ணெய் கம்பனியின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 9ம் அடங்கும்.

இந்த வருட ஜனவரி மாதத்தின் பின் வடக்கில் துணுக்காய் பகுதியில் ஒன்றும் கிழக்கில் கிண்ணியாவிலும், பொத்துவிலிலும் தலா ஒவ்வொரு நிரப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

டக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிரப்பு நிலையங்களினூடாக விற்கப்படும் எரிபொருளின் அளவு அதிகரித்துள்ளது.

2008 வரவு செலவுத் திட்ட யோசனையின்படி மின்சார சபைக்கு 25 ரூபா படி மசகு எண்ணெய் ஜனவரி மாதம் முதல் நாம் கொள்வனவு செய்யும் அதே விலைக்கு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு மசகு எண்ணெய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு இந்திய எண்ணெய்க் கம்பனி அனுமதி கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக