7 அக்டோபர், 2010

காதல் ஜோடிகளை அச்சுறுத்தி கையடக்க தொலைபேசிகளை பறித்து வந்த பொலிஸார் இருவர் கைது



கண்டி நகரில் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி அவர்களின் கையடக்க தொலைபேசிகளை பறித்து செல்லும் நான்கு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த கண்டி பொலிஸார் கடமையாற்றும் பொலிஸ் இன்ஸ் பெக்டர் ஒருவரையும், சார்ஜன்ட் ஒருவரையும் இன்று கைது செய்துள்ளனர்.

பொலிஸ் சீருடையில் சென்று நகரில் நடமாடும் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி அவர்களின் கையடக்க தொலை பேசிகளை கண்டூ பொலிஸ் இன்ஸ் பெக்டர் ஒருவர் பறித்து வருவதாக நான்கு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இம் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்யுமாறு சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்தன விசடிட குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஆலோசனை வழங்கிருந்தார்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இன்று காலை இன்ஸ் பெக்டர் ஒருவரையும் சார்ஜன் ஒருவரையும் கைது செய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இந்நிலையில் நீதவான் குறித்த இருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக