7 அக்டோபர், 2010

அதிகளவு கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை



உலகில் அதிகளவு கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை திகழ்வதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் 8000 அரசியல் கைதிகள் அடங்குவதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஜூரிகள் பேரவையினால் இந்தப் புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவிதமான பிடிவிராந்தோ அல்லது வேறும் சட்ட ரீதியான பின்னணியோ இன்றி ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக