20 செப்டம்பர், 2010

நாட்டைக் காப்பாற்றியவருக்குச் சிறை; எதிரிகளுக்கோ உயர் பதவி! : ஜதேகூ

விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து, அரசுக்கு எதிராகச் செயற்பட்ட கே.பி. மற்றும் கருணா ஆகியோருக்கு விடுதலை பெற்றுக் கொடுத்து, உயர் பதவிகளையும் வழங்கியுள்ள அரசாங்கம், நாட்டைக் காப்பாற்றிய இராணுவத் தளபதிக்கு சிறைத் தண்டனை வழங்கத் தீர்மானித்துள்ளது என ஜனநாயகத் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது.

டில்வின் சில்வா மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் தலைமையில் இன்று கட்சி அலுவகலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக