20 செப்டம்பர், 2010

முட்டை விலையை அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும்




முட்டை தட்டுப்பாட்டை தோற்றுவித்து முட்டை விலையை அதிகரித்தால் உடனடியாக முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் என்று கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னா ண்டோ கூறியுள்ளார்.கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக் கையில் மேலும் கூறியு ள்ளதாவது :-

முட்டை விலை அதிகரிக்குமானால் அமைச்சின் லொறிகளை கோழி வளர்ப்போரின் பண்ணைகளுக்கு அனுப்பி முட்டைகளை கொள்வனவு செய்து லக் சதோச, பொருளாதார கேந்திர ங்கள் மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் பாவனையாளர்களுக்கு சந்தைப்படுத்தப்படும்.

இலங்கையின் சிறிய மற்றும் பாரிய அளவிலான கோழி வர்த்தகர்களின் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை முட்டையொன்றை 12 ரூபாவுக்கும் சிகப்பு முட்டையொன்றை 12 ரூபா 50 சதத்துக்கும் தொகையாக விற்பதற்கு இந்தச் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக