20 செப்டம்பர், 2010

பிரபலமான, திறமையான வேட்பாளர்கள் உள்ளூராட்சி தேர்தலில் களமிறக்கப்படுவார்கள்-கயந்த

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சிறந்தமுறையில் தயாராகிவருகின்றது. கீழ்மட்டத்திலிருந்து நாங்கள் பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். பிரபலம் வாய்ந்த மற்றும் திறமையான வேட்பாளர்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சார்பில் களமிறக்கப்படுவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஆரம்ப பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் தயார் நிலை தொடர்பில் விபரிக்கையிலேயே கயந்த கருணாதிலக்க எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அது தொடர்பில் மேலும் கூறியதாவது

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின்றன. எவ்வாறெனினும் தேர்தல் ஒன்றுக்கு நாங்கள் தயாராகவேண்டியுள்ளது.

மேலும் அடுத்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே நடைபெறும் என்று கூறப்படுகின்றது. அப்படியாயின் புதிய தேர்தல் முறைமைக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சி தேர்தலுக்கு தயாராகவேண்டிய தேவை உள்ளது.

எனவே ஐக்கிய தேசிய கட்சி புதிய உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலுக்கு தயாராகும். புதிய உள்ளூராட்சிமன்ற சட்டமூலம் தொடர்பில் சில தெளிவபடுத்தல்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றது. அது தொடர்பான தெளிவுபடுத்தல்களை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும் மிகவும் பிரபலமான மற்றும் திறமையான வேட்பாளர்களை உள்ளூராட்சி தேர்தலில் களமிறக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இது விடயத்தில் கீழ் மட்டத்திலிருந்து எமது கட்சி தயாராகிவருகின்றது. மேலும் இவ்விடயங்களை ஆரக்ஷிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக