20 செப்டம்பர், 2010

அகதிகள் குறித்த சட்டதிட்டங்களைக் கடுமையாக்க கனேடிய அரசு உத்தேசம்

இலங்கை அகதிகள் தொடர்பான சட்டதிட்டங்களைக் கடுமையாக்க கனேடிய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையைக் கனடாவும் பின்பற்றுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தொடர்பில், அவுஸ்திரேலிய கடுமையான கொள்கையை கடைபிடித்து வருவதால் அங்கு அகதிகள் வருகை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் சன் சீ கப்பல், தனது ஆஸி. பயணத்தை ரத்து செய்து, கனடாவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

எனவே ஆஸியின் கொள்கையைக் கனடாவும் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அங்கு வந்துள்ள 492 இலங்கை அகதிகளையடுத்து, மேலும் பலர் வரவிருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து கனடா, மேற்படி கொள்கையைக் கடைபிடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி, இது தொடர்பான ஆலோசனைகளைப் பெறும்பொருட்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

ஜேசன் கென்னி இன்று ஆஸி.குடிவரத்துறை அமைச்சர் கிரிஷ் ப்ரௌனை சந்தித்து, இலங்கை அதிகள் தொடர்பில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பேசவுள்ளதாக அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக