21 செப்டம்பர், 2010

மன்னாரிலிருந்து கொழும்பு வந்த பஸ் ஆனமடுவவில் விபத்து : நால்வர் பலி

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஆனமடுவப் பகுதியில் விபத்துக்குள்ளானது. பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் இதில் நால்வர் பலியானதாகவும் எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். காயமடைந்த சாரதி உட்பட 20 பேர் ஆனமடுவ வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களின் சடலங்கள் ஆனமடுவ வைத்தியாசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக