21 செப்டம்பர், 2010

சட்டவிரோத ஆட்கடத்தல்: குற்றத்தை ஏற்ற இலங்கையருக்கு அவுஸ். நீதிமன்று 5 வருட சிறை

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 5 வருடத்திற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை வழங்க உள்ளது.

சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள பெண்டில் ஹில் என்கிற இடத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழரான பத்மேந்திரா புலேந்திரன் (வயது 36) என்கிற இளைஞனே இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கி இருந்தார் என்பதை நேற்று சிட்னிஸ் டவ்னிங் நிலைய மாவட்ட நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.

இவர் நீதிபதி ரொபின் டொப்மென் முன்னிலையில் சாட்சியம் வழங்கினார். 20 இலங்கையர்கள் கடந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அவுஸ்திரேலியா வருகின்றமைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று இச்சாட்சியத்தில் ஒப்புக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக