21 செப்டம்பர், 2010

சிறுமிகளை திருமணம் செய்த இருவர் உட்பட அறுவர் கைது

குறைந்த வயதுடைய இரு சிறுமிகளை போலி ஆவணங்களைக் காட்டி திருமணம் செய்த இரு இளைஞர் உட்பட ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பண்டாரவலைப் பகுதியில் 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளை 20 வயது இளைஞர்கள் இருவர் திருமணம் செய்துள்ளனர்.

இதற்கு உடைந்தையாக இருந்து சாட்சியாகக் கையொப்பமிட்ட இருவர் மற்றும் 19 வயது என போலி சத்தியக் கடதாசி வழங்கிய சமாதான நீதவான் உட்பட ஆறு பேரை சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக