21 செப்டம்பர், 2010

கோழி பண்ணையாளரிடமிருந்து முட்டை நேரடி கொள்வனவு அமைச்சர் ஜோன்ஸ்டன் அதிரடி நடவடிக்கை


அமைச்சர் ஜோன் ஸ்டன் பெர்னாண்டோவின் அதிரடி நடவடிக்கையையடுத்து நாடளாவிய ரீதியில் இன்று முதல் குறைந்த விலையில் கோழி முட்டைகள் விற்கப்படுகின்றன.

நேற்று முதல் அமைச்சினூடாக கோழிப் பண்ணையாளர்க ளிடமிருந்து நேரடியாக முட்டைகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் நேற்றிரவு முதலே நாடளாவிய ச.தொ.ச. மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் குறைந்த விலைக்கு முட்டைகள் விற்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் தெரிவித்தார்.

நேரடியாக முட்டைகளைக் கொள்வனவு செய்யும் வகையில் கூ.மொ.வியின் லொறிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதற்கிணங்க நேற்று கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகள் உடனடியாகவே நேற்றிரவு முதல் கூட்டுறவு மொத்த நிலையம் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக