10 ஆகஸ்ட், 2010

அச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையில் நாற்பது பாரிய தொழிற்சாலைகள்


யாழ்ப்பாணம் அச்சவேலியில் 40 தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கைத்தொழிற் பேட்டைக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக் கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.

இந்நிதிக்கான அங்கீகாரத்தை தேசிய திட்டமிடல் திணைக்களம் வழங்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இக் கைத்தொழில் பேட்டைக் கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளதுடன், இதில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான இணக்கத்தினையும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ்.

அச்சுவேலி பகுதியில் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென 65 ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளதுடன் இதில் 25 ஏக்கர் காணியில் ஆடைத் தொழிற்சாலைகளும் 40 ஏக்கர் கணியில் கைத்தொழில் பேட்டையும் அமைக்கப்படவுள்ளன.

வற்றுக்கான செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வடபகுதி அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கும் கையளிக்கப்பட்டு அதன் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

கைத்தொழிற் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக அப்பகுதியில் நீர், மின்சாரம் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளையும் ஏற்படுத்தவென 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளதுடன் கைத்தொழில் பேட்டையில் அமையவுள்ள 40 தொழிற்சாலைகளை நிர்மாணித்து வழங்குவதற்கு வெளிநாடுகளின் நிதியுதவி யைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு நடவடிக் கைகள் நிறைவடைந்ததும் உடனடியாகவே கைத்தொழில் பேட்டைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகுமென குறிப்பிட்ட அவர், இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக