10 ஆகஸ்ட், 2010

ஐநா பிரதிநிதித்துவ பதவியிலிருந்து பாலித்த ஓய்வு?



ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹண, எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் இடம்பெறும் ஐநா பொதுக் கூட்டத்தையடுத்து, ஓய்வுபெறலாம் என நியூயோர்க் செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேவேளை, பாலித்த கோஹணவுக்கு பதவி நீடிப்பு வழங்காமல் அவரை எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் ஓய்வுபெற அனுமதிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு விடயத்தில், போதிய அழுத்தங்களை மேற்கொண்டு அதனை இடைநிறுத்த தவறினார் என்ற குற்றச்சாட்டும் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே கோஹணவுக்கு ஓய்வினை அளிக்க அரசு தீர்மனித்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் நாடு திரும்பவுள்ள கோஹணவுக்கு வேறு அரச பதவி வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக