10 ஆகஸ்ட், 2010

ஆப்கனில் கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்டு தலிபான்கள் தண்டனை

ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி விதவையை தலிபான்கள் கொடூரமாக சுட்டு கொன்ற தண்டனை நிறைவேற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பட்ஹிஸ் மாகாணத்தைச் சேர்ந்த் பிவீ சானுபா (35) என்றபெண் இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டார். விதவையாக இருந்தபோது தவறான வழியில் சென்றதால் கர்ப்பம் அடைந்தார். இதனால் அந்த பெண்ணுக்கு தலிபான் கோர்ட் மரண தண்டனை விதித்தது. அதன்படி பிவீ சானுபாவை பொதுமக்கள் முன்பு, பின்புறமாக கைகளை கட்டி தலையில் துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பன்னாட்டு படைகள் இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தலிபான் கோர்ட் ஆயிஷா பிவீ என்ற 18 வயது பெண், கணவனின் வீட்டைவிட்டு வெளியேறிதற்காக மூக்கினையும், காதுகளையும் வெட்டியெறிந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக