5 ஜூலை, 2010

ஐநா செயலாளரின் நிபுணர் குழுவிற்கு அணிசேரா நாடுகள் எதிர்ப்பு

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு அணிசேரா இயக்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதுடன் இதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராகி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளையோ பாதுகாப்புச் சபையையோ கலந்தாலோசிக்காது ஐக்கிய நாடுகள் செயலாளரால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த அணிசேரா நாடுகளின் பிரதிநிதி ஒருவர் இது இலங்கையின் இறைமைக்கும் எதிரானது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நகல் கடிதமொன்று அணிசேரா நாடுகள் அனைத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் எகிப்தும் இந்த நிபுணர் குழுவிற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக