5 ஜூலை, 2010

பரந்தன் பகுதியில் குழந்தையின் சடலம் பொலிஸாரால் மீட்பு


பரந்தன் பகுதியில் குழந்தை ஒன்றின் சடலம் கிளிநொச்சி பொலிஸாரால் கடந்த வெள்ளிக் கிழமை மீட்கப்பட்டுள்ளது.

பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள பற்றைக்குள்ளிருந்தே இந்தச் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தையை தாயாரே பற்றைக்குள் வீசியிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இதுவரை இந்தக் குழந்தையின் தாயார் யாரென்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக