5 ஜூலை, 2010

சதாமின் உளவாளிக்கு குவைத்தில் குடியுரிமை


இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனின் உளவாளியாக நம்பப்பட்ட பவ்ஸி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு குவைத் அரசு குடியுரிமை அளித்து கெüரவித்துள்ளது.

1990-ம் ஆண்டு குவைத் மீது இராக் படையெடுத்தது. அப்போது சதாம் ஹூசேனின் தலைமையிலான இராக் படை குவைத்தை சுற்றிவளைத்து கைப்பற்றியது.

இராக்கின் இந்த பெரிய வெற்றிக்கு பவ்ஸிதான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. 1990ம் ஆண்டு போர் நடந்த போது பவ்ஸியும், அவரது குடும்பத்தாரும் குவைத்தில் தங்கி இராக் படைக்கு தேவையான உளவுத் தகவல்களை சேகரித்து கொடுத்துள்ளனர்.

குவைத்தில் ஷியா முஸ்லிம்களின் மசூதிகள் எங்குள்ளன, ஷியா முஸ்ஸிம் மக்கள் அதிகமாக எப்பகுதியில் வசிக்கின்றனர் உள்பட முக்கியமான அனைத்து தகவல்களையும் கடிதத்தின் மூலம் ரகசியமாக சதாம் ஹுசேனுக்கு அளித்துள்ளார் பவ்ஸி.

குவைத் குறித்து இப்படி ரகசியத் தகவலை பவ்ஸி அளித்ததன் மூலமே அந்நாட்டை இராக் எளிதாக கைப்பற்ற முடிந்தது என்றும் அப்போது பேசப்பட்டது.

ஆனால் இதை பவ்ஸி திட்டவட்டமாக மறுத்து வந்தார். ஆனால் சதாம் ஹுசேனுக்கு பவ்ஸி எழுதிய கடிதங்கள் சில சமீபத்தில் சிக்கியுள்ளன. இதன் மூலம் சதாம் ஹுசேனுக்கு பவ்ஸியும், அவரது குடும்பத்தாரும் உளவாளிகளாக செயல்பட்டது உறுதியாகியுள்ளது.

எனினும் குவைத் அரசு இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பவ்ஸிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் குடியுரிமை அளித்து கெüரவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக