5 ஜூலை, 2010

2015-ல் சீன மக்கள் தொகை 139 கோடியாக உயரும்


அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை 139 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அந் நாட்டின் மக்கள்தொகை கொள்கை அமைப்பின் தலைவர் லி பின் கூறியதாவது:

சீனாவின் மக்கள் தொகை 2015-ல் 139 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது நகர மக்கள் தொகை 70 கோடியாக இருக்கும்.

நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக கிராம மக்களை விட நகர மக்கள் அதிகமாக இருப்பார்கள்.

2015-ல் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 20 கோடியாக உயரும்.

2008-ல் சீனாவின் மக்கள் தொகை 132 கோடியாக இருந்தது. இது 1949-ல் சீனா உருவானபோது இருந்ததைப் போன்று 2.5 மடங்கு அதிகம்.

1978-க்குப் பின் சீனாவில் "பெற்றோருக்கு ஒரு குழந்தை' கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், 1978 முதல் 2008 வரை பிறப்பு விகிதம் 40 சதவீதத்துக்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக, 15 வயதுக்குக் குறைவானவர்கள் அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு குழந்தை கொள்கை காரணமாக சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுவது சரியல்ல என்றார் லி பின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக