5 ஜூலை, 2010

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்மொழிப் பிரிவு

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் மொழிப் பிரிவு ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான வைபவத்தில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விஜய குணரட்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 100 சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சி வகுப்புக்கள் இன்று மட்டு. பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஆரம்பமாகின.

100 பொலிசாருக்கு 6 மாதகால தமிழ் மொழிப் பயிற்சி முடிவடைந்ததும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படுமென பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி கே..ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக