23 ஜூலை, 2010

இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் போர் மூளும்



மும்பை தாக்குதல் போன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் ராணுவக் கூட்டுப் பணிகள் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் புதன்கிழமை கூறியதாவது:

மும்பை தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சிறிய பயங்கரவாதிகள் குழுதான் நடத்தியது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுவிடும் அளவுக்கு அதன் விளைவுகள் இருந்தன.

இரு நாடுகளிடையே போர் ஏற்படாவிட்டாலும், போர் ஏற்படும் அளவுக்கு பயங்கரவாதத் தாக்குதல் பயங்கரமாக அமைந்திருந்தது.

இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அது இந்தியா-பாகிஸ்தான் போர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதுபோன்று நடக்காதிருக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக