23 ஜூலை, 2010

மனித உரிமை மீறல் அமெரிக்கா கண்டிப்பு


கொழும்பு:"மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்கவும், பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இலங்கையை, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக், இலங்கையில் ஒரு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதிபர் ராஜபக்ஷே, எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:இலங்கையில் போர் முடிந்துள்ளது. இனிமேல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது தான், முக்கிய வேலை. இதன்மூலம் மட்டுமே, இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்த முடியும். மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க, நடவடிக்கை அவசியம். குறிப்பாக, மீடியாக்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு பிளேக் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக