23 ஜூலை, 2010

கட்டணங்களை குறைக்காவிடின் வேலைநிறுத்தப்போராட்டம்-தனியார் பஸ் சங்கம்

undefined
மேல் மாகாண தனியார் பஸ் சேவையாளர்களுக்கான குறுந்தூர போக்குவரத்துக் கட்டணம், பயணிகளுக்கான சேவைக் கட்டணம், போக்குவரத்து அனுமதிக் கட்டணம் போன்ற பல்வேறு கட்ட ணங்களை மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை அதிகரித் துள்ளது. அவ்வதிகரிப்பினை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் குறைக்காவிடின் மேல் மாகாணத்தில் தாம் வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையார்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஒழுங்கான நேர அட்டவணையின்மையினால் போக்குவரத்து சேவையில் பாரிய சிக்கல்கள் தொடர்ந்து கொண்டேயுள்ளன. ஆகையினால் உரிய முறையிலான நேர அட்டவணையினையும் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் அந்தச் சங்கத்தின் தøலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பானது தனியார் பஸ் உரிமையாளர்களை பெரிதும் அசௌகரியத்துக்குள்ளாக்கியுள்ளது. ஆகையினாலேயே அதனை உடனடியாக குறைக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக் எமக்கு விருப்பமில்லை. இருந்த போதிலும் எமது பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கா விட்டால் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதை தவிர வேறு வழியும் இல்லை. இதனை சகல பஸ் உரிமையாளர்களுடனும் கலந்தாலோசித்தே தீர்மானித்தோம். அத்தோடு எமக்கு தொடர்ச்சியாக இருந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத போதும் இவ்வாறு புதிது புதிதாக கட்டணங்களை அதிகரிப்பதானது முறையற்ற செயலாகும்.

நினைத்த நினைத்த நேரங்களில் எல்லாம் பொலிஸார் பஸ் தரிப்பு நிலையங்களை மாற்றுகிறார்கள். அவ்வாறு மாற்றுவதால் பயணிகள் உட்பட சகலரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். அவ்வாறு மாற்றுவதற்கு பொலிஸாருக்கு உரிமையுமில்லை.

பஸ் தரிப்பு நிலையங்களை அவ்வாறு மாற்றியமைப்பதானால் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு பெற்றதன் பின்னரே அது மாற்றியமைக்க வேண்டும். அண்மையில் கொழும்பு சலாக்கா பகுதியில் இருந்த பஸ் தரிப்பிடம் மாற்றப்பட்டுள்ளது. அதனால் பயணிகள் உட்பட போக்குவரத்து பஸ்சாரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் செயற்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல முறைகள் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியும் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எனவே தான் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென்று முடிவெடுத்துள்ளோம். எமது இந்த முடிவில் எவ்வித மாற்றமுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக