23 ஜூலை, 2010

இரட்டைக் குழந்தைகளுடன் தாய் உருக்கமான சந்திப்பு

ஆஸ்திரேலியாவில் அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டை பெண் குழந்தைகளை அவர்களின் தாய், 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்தார்.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் மாலிக் (24). இவருக்கு தலை ஒட்டிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவரது வறுமையை அறிந்த ஆஸ்திரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனம், 3 வயதான அந்தக் குழந்தைகளைத் தத்தெடுத்தன. கடந்த டிசம்பரில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 32 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சிகிச்சை அளிக்கப்படும் அந்தக் குழந்தைகளை அவர்களின் தாய் லவ்லி மாலிக், இந்த மாத தொடக்கத்தில் சந்தித்துள்ளார்.

டாக்காவிலிருந்து விமானம் மூலம் மெல்போர்ன் வந்த அவர், இரு குழந்தைகளையும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்ததாக ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருப்பார்கள் என்றும், அவர்கள் வங்கதேசம் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்களின் தாய் லவ்லி மாலிக் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக