23 ஜூலை, 2010

17ஆவது திருத்தம் தொடர்பில் ஐ.தே.க., ஐ.ம.சு.மு. பேச்சு

undefined
அரசியல் யாப்பின் 17ஆவது திருத் தத்தை அமுல் செய்வது தொடர்பாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழு ஒன்று நேற்று வெளிவிவகார அமைச்சர் பேரா சிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

17வது திருத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்த யோசனைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு வருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பை அடுத்தே ஐக்கிய தேசிய கட்சி தூதுக்குழுவினர் அமைச்சர் பீரிஸை சந்தித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருந்த யோசனைகளில் சிலவற்றை ஆராய்வதற்கு அரசாங்கம் காலஅவகாசம் கோரியிருந்ததால் அவை பற்றி பேசவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று திரு. மைக்கேல் பெரேரா மேலும் தெரிவித்தார்.

17வது திருத்தித்திற்கான அரசியல்யாப்பு மாற்றங்கள் தொடர்பான யோசனைகள் அமைச்சர் டியு?? குணசேகர தலைமையிலான குழுவொன்று பரிசீலனை செய்து வருகிறது. நாட்டின் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசியல்யாப்பின் 17வது திருத்தத்தை அமுல் செய்வது அவசியமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதராக ஜனநாயக தேசிய முன்னணி சட்ட சடவடிக்கை

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தொடர்ச்சியாக இரண்டாவது தினமாக பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆனுமதி மறுக்கப்பட்டமை நீதிமன்றத்தை அவமதித்த செயலாகும் என்று கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

ஜெனரல் பொன்சேகா பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் உட்பட பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவை மீறி அவர் நேற்றும் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டார் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முரளி 800வது விக்கட்டை கைப்பற்றி சாதனை

இலங்கை சுழற்பந்து வீச்சு வீரர் முத்தையா முரளிதரன் காலியில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான நேற்று அவரது 800வது டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி ஒன்றில் 800 விக்கட்டுகளை கைப்பற்றிய முதலாது வீரர் முரளி ஆவார். முரளி டெஸ்ட் கிரிக்கட்டிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக