23 ஜூலை, 2010

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்த கருத்து குறித்து சீற்றம்

undefined
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக கொண்ட பலஸ்தீன இலங்கை நட்புறவுச் சங்கம், இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் இளைப்பாறிய இராணுவ அதிகாரி டொனால்ட் பெரேரா இஸ் ரேலை ஆதரித்துத் தெரிவித்த கருத்துக்கள் குறித்து சீற்றம் அடைந்துள்ளது. பலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் இஸ்ரேல் அவர்கள் மீது போர் தொடுக்க வேண்டும் என்று டொனால்ட் பெரேரா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

பலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்தின் இணை தலைவரும் அரசாங்க அமைச்சருமான அதாவுட செனிவிரத்ன இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், தூதுவர் பெரேரா என்னதான் சொன்னாலும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பலஸ்தீனர்களுக்கு ஆதரவானது என்றும் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு ஊக்குவிப்பதே என்றும் தெரிவித்தார்.

எவராலும் அறிக்கைவிட முடியும் ஆனால் இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு நாங்கள் பலஸ்தீனர்களின் அனுதாபிகள் என்பதே என்றும் அமைச்சர் செனிவிரத்ன மேலும் தெரிவித்தார்.

இமிதியாஸ் பார்கீர் மார்கார் எச்சரிக்கை இதற்கிடையில், நட்புறவுச் சங்கத்தின் மற்றுமொரு இணை தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான இமிதியாஸ் பாக்கீர் மார்கார் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் பெரேரா தெரிவித்த கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பதை அரசாங்கம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

பலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்திற்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ இத்தகைய பொறுப்பற்ற கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்த தூதுவர் பெரேரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இமிதியாஸ் கேட்டுக் கொண்டார்.

இஸரேலே இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு போர்ப்பயிற்சி அளித்து உதவிய இஸ்ரேல், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகøளை தோற்கடிக்கவும் உதவியது என்று ஒரு எழுத்தாளர் எழுதியதை சுட்டிக்காட்டிய இமிதியாஸ், தற்போது இலங்கை இராணுவத்தில் பொறுப்பான பதவி வகித்த பெரேரா இஸ்ரேலை ஆதரித்து பேசுவதையும் ஒப்பிட்டுக் காட்டினார். பலஸ்தீனர்களுக்கு விடுதலை தேவை, இந்த நிலைப்பாட்டை இலங்கை ஆதரிக்கிறது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களையும் பயிற்சியையும் பெற்றுக் கொண்டதால் அந்த நாடு பலஸ்தீனர்கள் மீது தொடுத்துள்ள யுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்றில்லை எனக் குறிப்பிட்ட இமிதியாஸ் இத்தகைய அறிக்கைகள் விடப்படுவது தொடருமானால் இலங்கை இஸ்லாமிய நாடுகளிலிருந்து தனிமைப்படுத்ப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக