22 ஜூலை, 2010

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்: இஸ்ரேலுக்கு இலங்கை ஆதரவு

undefined
பாலஸ்தீனத்தில் நிலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கும்.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் கூட்டுப்படையதிகாரியுமான டொனால்ட் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

வைநெட் நியூஸுக்கு(வடூடீசிடூடீசூஙூ) அளித்த செவ்வியொன்றின் போதே டொனால்ட் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும். பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

எமது நாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தகவல்கள் பரிமாற்றம், இராணுவத் தொழில்நுட்பங்கள், கருவிகள் போன்றவற்றை இஸ்ரேல் தந்துதவியது.

எமது வான்படையில் 17 கிபீர் யுத்த விமானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எமது விமானிகள் இஸ்ரேலில் பயிற்றுவிக்கப்பட்டனர்.

கடந்த சில வருடங்களில் பில்லியன் கணக்கான டொலர் உதவிகளும் எமக்குக் கிடைத்தன. அதனால்தான் நான் இஸ்ரேலில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன் எனக் கருதுகிறேன்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக