22 ஜூலை, 2010

சிறப்பு உரிமைகளை சரத் பொன்சேகாவிற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

தடுத்து வைக்கundefinedப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை வழங்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூல உத்தரவை சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .பாராளுமன்ற கூட்டத் தொடர்களுக்கும் குழுநிலை விவாதங்களுக்கும் உரிய நேரத்தில் சமூகம் அளிக்கக்கூடியவகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் கேட்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபாநாயகரிடம் நேற்றைய தினம் முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக