22 ஜூலை, 2010

முரளியின் சாதனையுடன் இலங்கை அணி வெற்றி

undefined
காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

800 விக்கெட்டுகளை வீழ்த்தி நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியின் 5வது நாளான இன்று முரளிதரன் சாதனை படைத்து இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முத்திரைப் பதித்துள்ளார்.

அதேவேளை குறித்த டெஸ்ட் போட்டியுடன் விடைபெறும் முரளிதரனுக்கு இப்போட்டியில் வெற்றி பெற்று அதை பரிசாக வழங்குவோம் என இலங்கை அணித் தலைவர் சங்கக்கார தெரிவித்திருந்தார். அதன்பிரகாரம் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 18ம் திகதி இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. போட்டியின் 2ஆம் நாள் மழை காரணமாக நடைபெறாத போதிலும் 3ஆம் நாள் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 520 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அதையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் திரும்பவும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 338 ஓட்டங்களை மட்டும் பெற்றது. , , , , , , , , , , , , , , ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக