4 மே, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்யும் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நாளை கூடுகிறது-





நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகாமீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யவென அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றம் மீண்டும் நாளை நண்பகலில் கூடவுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை கடற்படைத் தலைமையகத்தில் இன்றுபிற்பகல் இடம்பெற்ற இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணையில் ஜெனரல் சரத்பொன்சேகா கலந்து கொள்ளவில்லையெனவும் அவர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக அவரது சட்டத்தரணிகள் இராணுவ நீதிமன்றில் ஆஜராகியிருந்ததாகவும் பிரிகேடியர் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் முழுமையாக பங்குகொள்ள தனக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டதற்கமைய அவருக்கு சபாநாயகரால் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக