4 மே, 2010

இலங்கை: ஹோட்டலில் குண்டுவைத்தவர் கைது


கொழும்புவில் உள்ள முன்னணி ஹோட்டலில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெடிகுண்டு வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் வட இலங்கையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

2008 ஜனவரி 2 அன்று நிப்பான் ஹோட்டலில் குண்டுவைத்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் செல்வநாயகம் என்கிற அரவிந்தனை வவுனியா போலீசார் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

பின்னர் கொழும்பு மாவட்ட கூடுதல் நீதிபதி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்காக பயங்கரவாதப் புலனாய்வுத் துறையினரிடம் அவரை ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து 7 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக