29 ஏப்ரல், 2010

நாவலப்பிட்டிச் சம்பவம் : எம்பிக்கள் மூவரிடமும் ஸ்ரீலசுக விசாரணை

நாவலப்பிட்டிச் சம்பவம் தொடர்பாக கண்டி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஸ்ரீ.ல.சு.க.விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி பூட்டானில் இருந்து நாடு திரும்பியதும் இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது நாவலப்பிட்டிய பகுதியில் குழப்பம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றியே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி குழப்ப நிலை காரணமாக மீள் வாக்குப் பதிவு நடந்தது. எனினும் கண்டி மாவட்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அலுத்கமகே, கெஹெலியா றம்புக்வெல்ல, எஸ்.பி. திசாநாயக ஆகியோரிடம் வாக்குமூலம் பதியப்பட்டதாகக் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக